பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த பவனத்துக்குச் சுண்ணாம்பு அடிக்க அமர்த்தப்பட்ட கூலிக்காரர்கள் தங்களை அஜந்தா ஒவியர்களென்று

விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது நிலம் நடுங்கிற்று. பூமிச் சல்லடை எல்லாவற்றையும் போட்டுச் சலிக்கத் தொடங்கியது.

மண் வெளியில் மின்னல் வெடிப்புகள்! பூமிக்குத் தன்னைத்தானே விழுங்கும்

பேய்ப் பசி.

தீ நாக்குகள் ஒயாசிஸ்களை

மென்று விழுங்கிக் கொண்டிருந்தன.

கோபுரங்களும் செங்கோட்டைகளும்

குப்புறக் குனிந்துகொண்டிருந்தன.

மந்திரக்காரன் குப்பிக்குள் அடங்கும் வேதாளம் போல் இயற்கையின் சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

70