பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வெளிப்படையாக) இந்த மல்லிகைக் கொடி தனக்குப் போட்ட பந்தலை மீறி வெளியில் படர எப்போதும் விரும்பிய தில்லை.

இந்தப் புனித கங்கை ஆயிரம் ஆயிரம்

ஒடிப் பழக்கப்பட்ட கற்புப் படுகையைவிட்டுக் கரையுடைத்துச் செல்ல விரும்பியதில்லை.

இமைகளைத் தவிர வேறுயாரும் என் ஈர விழிகளைத் தீண்டியதில்லை, இராமனைத் தவிர வேறுயாரும் என் இதயத்தைத் தீண்டியதில்லை. மூச்சுக் குழல் சோற்றுப் பருக்கையை ஏற்றுக்கொள்வதில்லை. என் உள்ளமும் இராம நாம்த்தைத்தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

நான்வானத்திலிருந்து நழுவி விழுந்த மழைத் துளி.

88