பக்கம்:துணிந்தவன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 துணிந்தவன் வாய் வீச்சு வல்லவர்களும், சொல்புரட்டர்களும் மற்றவர்களின் அறியாமையை மூலதனமாக்கி, கட்சியை வியாபார அமைப்பாக மாற்றி, தங்கள் சொந்த வாழ்க் கையை வெற்றிகரமானதாக வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலை நீடிக்கிற இந்த நாட்டிலே, பரப்பிரம்மம் பி. ஏ. ஒரு சில வருஷங்களில் உயர முடிந்தது ஆச்சரிய மில்லைதான். - ரம்பத்தில் வாரத்தாள் ஒன்றிலே உதவி ஆசிரிய ராகப் பணிபுரிந்தார் அவர் தமிழ் நாட்டில் பத்திரிகையின் உதவி ஆசிரியருக்கும் ஒரு புருப்ரீட'ருக்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதையும் உ.ஆ. வேறு பல அலு வல்களையும் கவனித்தாக வேண்டிய அந்தஸ்து பெற்றவர் என்பதையும் அவர் அனுபவ பூர்வமாகக் கற்றுக்கொண் டார். இரண்டரை வருடகால அனுபவஞானம் அவருக்கு இன்னும் எவ்வளவோ உண்மைகளைக் கற்றுக்கொடுத்தது. எழுதிப் பிழைக்கத் துணிகிறவனைவிட, பேசிப் பிழைக்க முன்வருகிறவன் வெற்றிகரமாக வாழமுடியும், கலபப் பெயர் பெறமுடியும், எளிதில் பணம் பண்ணவும் கூடும் என அறிந்தார் அவர். பலரைப் புகழ்ந்தும், சிலரை 'காக்கா பிடித்தும் , உரிய முறைப்படி கம்பி இழுத்தும் (வயர் - புல்லிங்) பெருந்தலைவர்களின் 'முதுகைச் சொறிந்தும், தேவைப்பட்ட சமயத்தில் பலன்தரக்கூடிய இடங்களில் சாமர்த்தியமாகக் காதுகுத்தி'யும், தனக்கெனத் தனி இடம் பிடித்தார். அதை அஸ்திவாரமாக்கி மேலும் மேலும் முன்னேறுவதற்கு ஏற்ற வழி தனிக்கட்சி அமைப் பதுதான் என்று உணர்ந்தார் அவர். உடனடியாக அமைத்தும் தீர்த்தார். மக்களின் நற்பண்புகளைப் போற்றி வளர்ப்பது சிரமம்; நல்லவர்களாக வாழவைக்க வழிகாட்டுவதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/102&oldid=923460" இலிருந்து மீள்விக்கப்பட்டது