பக்கம்:துணிந்தவன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**0 துணிந்தவன் மாதவன் நெஞ்சருகே கை பதித்தான். அங்கிருந்து ரத்தம் பெருகிப் பாய்ந்தது. அவன் குதிரைமீது சாய்ந்து விட்டான். 'கொலை யாரோ சுட்டுவிட்டார்கள்! மாதவ னைக் கொன்று விட்டார்கள்!" இந்த உண்மை மெதுவாகப் பரவியது, வேகமாகப் பறந்தது. எங்கும், எல்லோர் செவிகளிலும் பட்டது. அனைவர் வாயிலும் அடிபட்டது. மாதவனின் குதிரை மிரண்டது. திரும்பி ய து கும்பலை ஒதுக்கிக் கொண்டு வெளியேறத் துடித்தது.... மக்கள் முகத்திலே பயம். அவர்கள் உள்ளத்திலே பதி, எங்கும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டன. அதே நேரத்தில், எங்கோ இருந்த ஒரே ஒருவர் முகத்தில் சிரிப்பு வெடித்தது. தனது பாக்கெட் கடியாரத் தையே பார்த்துக் கொண்டிருந்த அவர் முகூர்த்தம் முடிந்துவிட்டது. இதற்குள் பயல் பாடம் படித்திருப் பான்!” என்று முனங்கினார். தனிமையையும் மறந்து பெரும் சிரிப்பு சிரித்தார். அவர் தான் தலைவர் செல்வரங்கம். முடிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/122&oldid=923482" இலிருந்து மீள்விக்கப்பட்டது