பக்கம்:துணிந்தவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s. - துணிந்தவன் மேலான யோசனைகளையும், சுயம்புவான அபிப்பிராயங் களையும் பொறுமையோடு கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார் கள். அவருடைய அபத்த கருத்துக்களைக் கூட ஆகா, அபார ஐடியா!' என்று பாராட்டி ஆரவாரித்தார்கள். அவர்கள் நடிக்கும் நடிப்பை எல்லாம் காணும் வாய்ப்பு பெற்ற மாதவன் பணத்துக்கு இருக்கிற மதிப்பு தான் என்னே என்னே! என்று எண்ணி, மனசால் சிரிப்பது வழக்கம். அவன் அந்த இடத்தில் குறைந்தது ஆறுமாத காலமாவது தான் தங்கியிருக்க வேண்டும்; தனது வளர்ச் சிக்கு வகை செய்யக்கூடிய புதிய இடம் வருவதற்கு முந்தி இதைத் துறந்துவிடக் கூடாது என விரும்பியதால், பவானந்தத்தின் குறைபாடுகளை எல்லாம் பெரிது படுத்த வில்லை. பவானந்தம் அநாவசியமாக அவன் விஷயங்களில் லையிடவுமில்லை; பாலசந்திரன் மாதவனைப் பற்றிக் றைகூறவில்லை; அவனது மேற்பார்வையில் பொழுது போக்க நேர்ந்ததற்காக வருத்தப்படவில்லை; அதற்கு மாறாக அவனுடைய ஆனந்தம் அதிகரித்தே வருகிறது என்பதைப் புரிந்து கொண்டார் அவர். அப்புறம் தாம் தலையிட்டுக் குட்டை குழப்புவதற்கு என்ன இருக்கிறது என்றே அவர் கருதினார். - o { ஒரு நாள் மாலை தோட்டத்தில் பெரியவர் தற் செயலாக மாதவனை சந்திக்க நேர்ந்தது. 'பாலசந்தர் உன்னைப் பற்றி ஆகா ஊகூ" என்று புகழ்கிறான். பேபிகூட உன்னிடத்தில் அபாரமான பிரியம் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே என்றார், சிரித்தார், பிறகு அவராகவே சொன்னார்: நான் 'நீ - உன்னை என்றெல்லாம் சொல்வதற்காக நீ வருத்தப்பட மாட்டாய் என்று நினைக்கிறேன். உனது சுயமரியாதையை அது பாதிக்கிறதாக நீ நினைக்கக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/52&oldid=923526" இலிருந்து மீள்விக்கப்பட்டது