பக்கம்:துணிந்தவன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 துணிந்தவன் பூதம் போன்ற உடலையும் சதை தளைதளத்து வெளிறிய மஞ்சள் நிறமாய்த் தொங்கிய கன்னங்களையும், ஒளி மங்கிய கண்ணாடிக் கோலிகள் போன்ற உணர்ச்சி எதையும் பிரதிபலிக்காத - சலனமற்ற கண்களையும் பார்த்தபோது, இந்த மாமிசப் பர்வதம் எதற்காக உயிர் வாழ்கிறது? இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்? என்று தான் மாதவன் எண்ணினான். அவளைப் பார்த்துப் போக, பெரிய இடத்து அம்மாள்கள் அநேகர் விஜயம் செய்வது வழக்கம். அவர் களில் சிலர் - விசாலாட்சி மாதிரி பணப் பெருக்கத்தையும் சுகவாசத்தையும் அறிவிக்கும் அளவு பெரியவர்களாகத் தான் காட்சி தந்தார்கள். பகட்டான பட்டாடையும், மின்னும் ஆபரணங்களும், பெருமித நடையும் தோரணை பும் அவர்களது செல்வப் பெருக்கைப் பிரகடனப் படுத்தும். அவர்களைக் காணும் போதெல்லாம் மாதவனின் மனக்கசப்பு மிகும். 'உண்பதும், உடல் அவஸ்தைகளைத் தீர்த்துக் கொள்வதும் தவிர வேறு உழைப்பு என்பதையே அறியாத சோம்பேறிப் பிண்டங்கள். மனித உணர்ச்சியற்ற பதார்த்தங்கள். பெரும்பாலர் ஒருவேளைகூட வயிறாற உண்ணமுடியாமல் வாடி மெலிகிற நாட்டில், அவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் உண்டு கொழுத்து உல்லாசமாக வாழ்கிற இந்தச் சதைக்குன்றுகளுக்கு யார் பாடம் கற்றுக் கொடுப்பது? வசதிகள் வஞ்சிக்கப்பட் டுள்ள பெரும்பாலரும் உணர்வுபெற்று உரிமைக் குரல் கொடுத்து ஒன்றுபட்டுக் கிளம்பினால்தான் இவர்களுக்குப் புத்தி புகட்ட முடியும். அந்தக் காலம் என்று வரப் போகிறது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/58&oldid=923532" இலிருந்து மீள்விக்கப்பட்டது