பக்கம்:துணிந்தவன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 அவன் உள்ளம் உலைக்களம் ஆகிவிடும். அனல் மூச்சு பொங்கி எழும். செயல்திறனற்ற வெறும் கோபத் தால் குமைவான் அவன். இவர்கள் எப்படியும் பாழா கட்டும்! வாழ முடியாத மிகப்பலரும் எவ்வாறும் நாச மாய்ப் போகட்டும் நான் வாழ்ந்து, அனுபவிக்க வேண்டும். காலக்கிண்ணத்தில் தரப்படுகிற வாழ்க்கை மதுவை அடிமண்டிவரை உறிஞ்சிச் சுவைத்து சகலவித ருசிகளை யும் ரசித்து மகிழ வேணும். அதற்கு முக்கியமானது பணம். நினைத்ததை எல்லாம் கைக்கு எட்டும்படி செய்யவல்ல மாய சாதனமான பணத்தை.நான் எப்படியேனும் பெற்றே தீரவேண்டும் என்று அவன் உள்ளம் ஆயிரத்தெட்டா வது முறையாக உருப்போடும். இவ்வாறு வெறித்தனமான எண்ணத்தில் மூழ்கி மாதவன் தோட்டத்தில் ஒரு செடி அருகே நின்றபோது, ஒரு நாள் பேபி அவனுக்குப் பின்னால் இவர்தான் பாலுவின் டீச்சர். ரொம்ப நல்லவர்னு நான் அடிக்கடி சொல்லலே, அவரேதான் என்று பேசியது கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். பேபி அரிசிப் பற்கள் முழுவதையும் காட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு அருகில் இனிய தோற்ற முடைய மங்கை ஒருத்தி நின்றாள். அவள் முகம் சிரிப்பின் அழகும் ஏற்று, அதிகமான கவர்ச்சியோடு திகழ்ந்தது. அவளுக்கு முப்பது வயசுக்குக் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். சற்றே அதிகமான சதைப் பிடிப்பு பெற்றிருந்த அவளைபருமனானவள் என்று சொல்ல முடியாது; ஆனாலும் மெலிந்தவள், ஒல்லியானவள் என்று கணக்கிடவும் இயலாது. அவள் உயரத்துக்கு அவ்வுடலின் வளர்ச்சி அமைவாகவும் எடுப்பாகவும் இருந்தது. அவள் அழகி, அதில் சந்தேகமில்லை. அழகுக்கு அழகு சேர்த்தது அவள் சிரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/59&oldid=923533" இலிருந்து மீள்விக்கப்பட்டது