84 துணிந்தவன் 'இது என்ன பிரமாத உதவி!' என்று யாரும் சகஜ மாகச் சொல்லக்கூடிய பதிலையே மாதவனும் சொன்னான். 'உங்களைப் போன்ற ஸ்டாரின் உதவியைப் பெறு வது சாதாரண விஷயமா?... சரி, இறங்குங்கள்' என்று துண்டுதல் அளித்தாள் ஒய்யாரி. அவனும் இறங்கி அவள் பின்னாலேயே சென்றான். நடு அறையில் கிடந்த ஸோபாவில் உட்காரும்படி அவனை உபசரித்தாள் ஜெவந்தி. கொஞ்சம் இருங்கள். ஒவல் தயா ரிக்கச் சொல்லிவிட்டு வருகிறேன்' என்று உள்ளே செல்ல முயன்றாள். 'இப்ப அது எதுக்கு ? வீட்டில் போய் சாப்பிட வேண்டியது தானே!" ஜெவந்தி உற்சாகமாகப் பேசினாள்: 'நல்லதாப் போச்சு. நீங்கள் இங்கேயே சாப்பிட்டு விட்டுப் போக லாம்.... ' அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் கேட்கத் தயாராக இல்லை. வெளியே போய் சாரதியிடம் சாரட்டை ஒட்டிக்கொண்டு போகும்படியும், மாலை ஐந்துஐந்தரை மணிக்கு வரும்படியும் அவளே அறிவித்து விட்டாள். வண்டி போன பிறகு, அவள் உள்ளே சென்று சமையல்காரிக்குச் சில உத்தரவிட்டாள். ஒவலும் கொண்டு தந்தாள். 'உங்கள் உபசரிப்பு ரொம்ப பலமாக இருக்குதே!' என்றான் அவன், சிறு சிரிப்புடன். அவள் சிரித்தாள். அவள் கண்கள் பேசத் தொடங்கின.