பக்கம்:துளசி மாடம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 துளசி மாடம்


"ஒரு பெண் தன்னைவிட முத்த இன்னொரு பெண் மேல் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டாளென்றால இந்தியாவில் அவளுக்கு ஒரு மாமியாரின் மருமகளாகும் தகுதி வந்துவிட்டதென்று அர்த்தம்."

அப்போது அவனுடைய பேச்சிலிருந்து ரவி மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று தெரிந்தது. கமலி வேணு மாமா வீட்டு விருந்தில் சந்தித்த சிலர் தன்னிடம் அதிகம் கூச்சப்பட்டு நாணியதையும் வேறு சிலர் சம்பந்த மில்லாதவற்றைப் பேசியதையும், விசாரித்ததையும் பற்றி ரவியிடம் இப்போது குறிப்பிட்டாள்.

"ஒரு பெண்ணிடம் பலர் முன்னிலையில் அளவுக்கதிக மாக வளைந்து நெளிந்து, கூனிக் குறுகிப் பாவனை செய்யும் ஆண்களிடம் அவர்களைத் தனியே சந்திக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கமலி. தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவையுள்ள போது தேவையான அளவுகூட நாணப் படாத பெண்ணும் சந்தேகத்துக்கிடமானவர்கள். விருந் தில் நீ சந்தித்த பலர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிகள். உன்னைப்போல் பல ஐரோப்பியர்கள் கிருஷ்ணா கான்ஷியஸ்னெஸ்", யோகா லேக்ரெட் புக்ஸ் ஆ. .ப் ஈஸ்ட் என்று கிழக்கே பார்த்து ஏங்குகிறீர்கள் இங்கே இந்தத் தேசத்தில் சிலர் தாழ்வு மனப்பான்மையோடு எல்லாமே மேற்கில்தான் இருக்கிறது என்று மேற்கே பார்த்து ஏங்குகிறார்கள். அதனால்தான் நீங்களும் இவர்களும் சந்திக்கும்போது எதிரெதிர்த் திசையில் ஆர்வங்கள் செ ல் லு கி ன் ற ன. நீ நாயுடுவிடம் விசிஷ்டாத்வைதத்தைப்பற்றி விசாரிக்கிறாய். நாயுடு உன்னிடம் விடோ'வைப் பற்றியும், மெளலின் ரோஜ்’ போல் பாரிஸில் ...ப்ளோர்ஷோ நடக்குமிடங்களைப் பற்றியும் விசாரிக்கிறார்." . -

"நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நாயுடுவும் அவரைப் போன்றவர்களுமே முழு இந்தியா ஆகிவிட மாட்டார்களே ? இதே இந்தியாவில்தானே வேதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/122&oldid=579838" இலிருந்து மீள்விக்கப்பட்டது