16 ● துளசி மாடம்
'ஏம்மா ?...நீ ஒண்னும் தப்பா நெனைச்சுக்க மாட் டேன்னா...உங்கிட்ட ஒரு யோசனை...?"
- “ gTairaar Lofruoft F** 'சில ஈரோப்பியன் லேடீஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு இண்டியன்ஸ்ை லவ் பண்ற மாதிரிப் பழகறதுண்டாம். அப்புறம் ஹெவியா-அவாளுக்குப் பணம் குடுத்துட்டா -டைவோர்ஸ் பண்ணின்டு விட்டுட்டுப் போயிடு வாளாம் ; நீதான் அந்தப் பெண்ணோட நன்னாப் பழகி யிருக்கியாமே. அவ வேணா ரவியோட இங்கே வரட்டும் -அதை நான் வேணாம்னு சொல்லலே. வந்தப்புறம் நீ வேணா அந்தப் பெண்ணோடத் தனியாக் கொஞ்சம் பேசிப் பாரேன்-'
“என்னத்தைப் பேசச் சொல்றேள் மாமா ?” "பண விஷயம்தான்... வேற எதைப் பேசச் சொல்லப் போறேன் ?"
'உங்களுக்கு யாரோ தப்பாச் சொல்லியிருக்கா மாமா கமலி அந்த டைப்” இல்லே அவ. ரவி மேலே உயிரையே வெச்சிருக்கா. பணம் ஒண்னும் அவளுக்குப் பெரிய விஷயமில்லே. அவ ஒரு பெரிய கோடீசுவரனோட பொண்ணு, பாரிஸ்லேயும் பிரெஞ்சு ரிவேரா (Riviera) விலும் ஒரு செயின் ஆஃப் ஹோட்டல்ஸுக்கு அவ அப்பா சொந்தக்காரர். அது தவிர மில்லியன் கணக்கில் விலை மதிப்புள்ள முதல் தரமான வொயின் யார்ட்-அதாவது திராட்சை நிலப் பண்ணைகளும் அவருக்கு உண்டு. உங்க சங்கரமங்கலத்தைப் போலப் பத்துச் சங்கரமங்கலத்தையே அவர் விலைக்கு வாங்கலாம்.”
சர்மா ஒரிரு விநாடிகள் அவளுக்கு என்ன பதில் சொல்வதென அறியாமல் மெளனமாயிருந்தார்.
2
இரண்டு மூன்று நிமிஷ மெளனத்துக்குப் பின் மறுபடி யும் சர்மா வசந்தியைக் கேட்டார்.