272 ● துளசி மாடம்
சப்-ஜட்ஜ்"ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் விசாரணை தொடங்கிற்று
'நீர் உமது வீட்டிலே கமலியை விருந்தினராகத் தங்க வைத்துக் கொண்டதும் அவள் சங்கரமங்கலத் திலும் சுற்றுப் புறத்திலும் உள்ள இந்து ஆலயங்களைத் தரிசிக்க அவளுக்கு உதவி செய்ததும் உண்மைதானா ?" என்று சர்மாவை விசாரித்தார் எதிர்தரப்பு வக்கீல். சர்மா உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். கமலி சாட்சி சொல்லுமுன் சத்தியப் பிரமாணத்துக்காக அவர்கள் பைபிளை எடுத்துக் கொடுக்க- அவள் தானே பகவத் கீதையைக் கேட்டு வாங்கிப் பிரமாணத்தைச் செய்து விட்டுத் தனது சாட்சியத்தைத் தொடங்கினாள்.
"இந்துக் கோவில்களில் தரிசிக்கப் போனது உண்மை தானா ?" என்று கமலியிடம் கேட்கப்பட்டது. கமலி ஒரே வாக்கியத்தில் உண்மைதான்'- என்று மறுக்காமல் அதை ஒப்புக்கொண்டு விட்டாள்.
'அப்படியானால் வேலை மிகவும் சுலபமாகப் போயிற்று. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருமே தாங்கள் செய்தவற்றை மறுக்காமல் செய்ததாக அப்படியே ஒப்புக்கொண்டு விட்டார்கள். மேற்கொண்டு விசாரிப்பதற்கு இனி எதுவுமில்லை. கனம் கோர்ட் டா ரவர்கள் நியாயம் வழங்கிப் பாதிக்கப்பட்ட கோவில்கள் சுத்தி செய்யப்பட்டுச் சம்ப்ரோட்சணம் நடைபெற வழி செய்து கொடுக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத் திருந்தவர்களின் வக்கீல் தம் வாதத்தைத் கொகுத்து முடித்தார்.
அப்போது வேணுமாமா கமலிக்கும் சர்மாவுக்கும் வக்கீல் என்ற முறையில் எழுந்திருந்து அந்த வாதத்தை ஆட்சேபித்தார். அவர் தரப்பு வாதத்தை அவர் எடுத்துச் சொல்லலாம் என்று சப்-ஜட்ஜ் கூறவே வேணுமாமா மேலும் தொடர்ந்தார்.