பக்கம்:துளசி மாடம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 51


அவனைத் திருப்பிக் கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான் ? என் வீட்டில் நாம் தங்குவதற்குப் போது மான வசதிகள் இல்லை. அதனால் இங்கே தங்க நேர்ந்தது என்று அவன் சொல்ல உன் வீட்டின் வசதியின்மையே எனக்குப் போதும். அங்கு போகலாம்' என்று அவள் பதில் கூறிவிட்டால் என்ன செய்வது ? தூர தேசத்துக்குப் போய்விட்டுப்_பல வருஷங்களுக்குப் பின் ஊர் 蠶 பிள்ளையை இத்தன்ை த்யக்கங்களோடும் வரவேற்க நேர் கிறதே என்று மனம் குழம்பினார் அவர். அவன்'ஊருக்கு வருவதை ஒரு மாதம் தள்ளிப்போட்டால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவுக்கு வரலாமே என்று அவருக்குத் தோன்றியது. அதனால்தான் வேணு மாமிா வைப்பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே அந்த ஏரோகிரா மைத் தபாலில் போட வேண்டாம்' என்று தன் பெண் பார்வதியிடம் வசந்திக்கு அவசர அவசரமாகச் சொல்லி அனுப்பிவிட்டுப் பூமி நாதபுரம் புறப்பட்டிருந்தார் 守f了莒了。

பூமி நாதபுரத்திற்குச் சென்றபோதும், அங்கு இருந்த போதும் இரவு நேரங்கழித்துத் திரும்பிய போதும் சர்மா வுக்குத் தாம் ரவிக்கு எழுதிய கடிதத்தின் தொடர்பான சிந்தனைதான். அவர் இரவு வீடு திரும்பிய போது பார்வதி தூங்கிப் போயிருந்தாள். காலையில் அவர் அகஸ்திய நதியில் நீராடி வீடு திரும்பிப் பூஜை புனஸ் காரங்களை முடித்துக் காப்பி மேடையை அணுகிய போது பார்வதி அந்த விவரங்களைத் தந்தையிடம் தெரிவித்தாள்.

"அப்பா ! நான் ஒடிப்போய்ச் சொல்றதுக்குள்ளே வசந்தி அக்கா அந்த லெட்டரைப் போஸ்ட் பண்ணிட்டா. அப்புறம் நீங்க பூமிநாதபுரம் போயிருந்தப்போ இறை மணி முடி உங்களைத் தேடிண்டு வந்தார். இன்னிக்குக் காலம்பர மறுபடி வரேன்னார்..."

"இறைமணி முடியில்லே இறை முடிமணின்னு சொல்லு." - - -

"இறை மணிமுடி,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/53&oldid=579769" இலிருந்து மீள்விக்கப்பட்டது