பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感蕊 ஆன்சன் rழுத்தே ?:ங்கள் அவன் எங்கே போளுனென்று தெரியுமா? என்று: அவசரம் அவசரமாகக் கேட்டான். " நான் கவனிக்கவில்லையே என்று பதில் கொடுத்தேன். உண்மையில் அவன் எந்தப் பக்கம் போளுனென்று நான் பார்க்கவில்லை. அந்த மனிதன், 'அடாடா ஏமாந்துபோய்விடுவோம் போலிருக்கிறதே" என்று கூறிக்கொண்டே ஒரு திக்கில் நடந்தான். - - 'நாலு பக்கமும் பார்த்துக்கொண்டே நான் மெது வாக நகர்ந்தேன். ஒருவன் கண்ணுடித் தம்ளர் விற் கிருன்; ஒரு கிழவி, லட்டெல்லாம் ரண்டணு, லட்டெல் லாம் ரண்டணு என்று சாத்துக்குடிப் பழம் விற்கிருள். பல்லுக்குச்சி ஒரு புறம்; பணியன் ஒரு புறம்: இன்னும் ரிப்பன் என்ன, பொத்தான் என்ன, பாச்சைக் குண்டு என்ன-இப்படிப் பல வகையான சாமான்கள் மக்கள் நடக்கும் குறுகிய பாதையிலேயே விற்கப்படுகின்றன. நகருவதற்குக் கூட இடமில்லை. ஒரே கூட்டம், ஒரே கூச்சல். நமது கிராமத்தில் அமைதியாக இருந்துவிட்டு வந்த எனக்கு இந்த ஆரவாரத்தைக் கேட்டுத் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதோடு அந்தப் பெட் ரோல் புகை நாற்றம் இருக்கிறதே, அதைத்தான் என்னுல் சகிக்கவே முடியவில்லை. தலைவலி எடுத்துக் கொண்டது. இருந்தாலும் பட்டனத்துக் காட்சி ஒரு தனிக் கவர்ச்சிதான். நான் இவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து கஜ தூரம் போயிருப்பேன். 'அதற்குள் அந்தக் கடிகாரக்காரன் திரும்பி வந்து சேர்ந்தான். சார், என்னிடம் பேசிக்ெ காண்டிருந் -Φ-Μ. Α. ه !يم -بس. م.؟-ې وييf? ٢ : تپي 象 · · . ఫ్లీ தானே, அவன் எங்கே போெைனன்று பார்த்திச் களா?' என்று கேட்டான்.