பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுட்டை છે(5 பெரிய செல் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று நான் மிகப் பெரிய சங்கடத்திற் குள்ளானேன் என்று சொன்னுல் நீங்கள் யாரும் எளிதில் நம்ப மாட் டீர்கள். திருமணம் என்ருலே குது கலமான நிகழ்ச்சி அல்லவா? அதிலும் பணம் படைத்தவர் நடத்தும் திருமணத்தைப் பற்றிக் கேட்கவ. வேண்டும்?' என்று இப்படிக்-கேள்விகள் உடனே உங்கள் உள்ளத்தில் உதயமாகி விடும். மெய்தான். அந்தத் திருமண வைபவத்திலும் குதுகலத்திற்குக் குறைவே கிடை யாது. எதிர்பார்த்ததற்கும் அதிகமாக இருந்ததென்று தான் சொல்ல வேண்டும், நள பாகத்தை எளிதில் தோற்கடிக்கும் அறுசுவை உண்டிகள், முதல்தர வித்துவான்களின் இசை யரங்குகள், பரத நாட்டியம், கும்பகோணத்துக் கொழுந்து வெற்றிலை, நெய்யில் வறுத்தெடுத்த களிப் பாக்கு என்று இப்படி நாளெல் லாம், ஏன் இரவு பதிளுெரு மணி வரையில், மாறி மாறிக் கிடைத்துக்கொண்டே இருந்தன. எங்கே பார்த்தாலும் விருந்தைப் பற்றியே பேச்சு; அது முடித் தால் இசைப் பேச்சு, பரத நாட்டியப் பேச்சு; "ஆகா! அற்புதமான ஏற்பாடு என்று வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டே அனைவரும் உரையாடிப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். - இத்தனை கோலாகலங்கள் இருந்தமையால்தான் அன்று இரவு நான் மிகவும் துன்பப்பட வேண்டிய தாய் விட்டது. பகலெல்லாம் ஒரே உற்சாகம். கண்