பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யவனன் பாட்டு

கிளையில்லை நிழலில்லை பூவில்லை கனியில்லை பொன் பசுமை கரும் பச்சை இல்லை தழையில்லை தழைத்திடவும் இனியோர் அரும்பில்லை மொக்கில்லை வேரில்லை மேதினியில் பற்றில்லை மென்காற்றின் தழுவலினால் விளையும் சிலிர்ப்பில்லை கலகலப்பும் இல்லை தேடிவந்து பாடிமகிழ் சிறு பறவை இல்லை பாலைவனம் வீழ்ந்த இந்தப் பருமரத்தைப் போலே ஆருமில்லாத் தனியானேன் ஆஹாஹா யுத்தம்!

இரண்டாவது உலக யுத்தத்தில் உயிர் தப்பித் தன்னந்தனியனாய் இந்தியாவில் தஞ்சம்புகுந்தயவன தேசத்தான் ஒருவன் பாடுவதாகத் தழுவற் கவிதை. கிரேக்கநாடு போரிலே பெரிதும் துன்புற்றது. மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர், ஒரு கணத்தில் மனைவிமக்கள்உற்றார்,உறவினர் அனைவரையும் இழந்தவர் எத்தனையோ பேர், அவ்வாறு துயருழந்தஒருவன்எண்ணங்களை இது தெரிவிக்கிறது.


              105