இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பு வழி
மக்களெலாம் தேவர்களாய்
மாறவொரு வழியுண்டு
மனம் படைத்த பெரும்பயனும்
மனிதனுக்கு வாய்த்திடுமாம்; தக்கபடி மனம் மலரத் தந்திரமும் நாமறிந்தால் தாரணியை விண்ணாடாய்ச் சமைத்திடலாம் நிச்சயமாய். மனம் என்னும் பெருங்குரங்கு மாயத்தின் பெருஞ்சூழ்ச்சி வாழ்வெல்லாம் தந்திடவும் தாழ்வெல்லாம் சூழ்ந்திடவும் கணத்தினிலே சொர்க்கமதும் கணத்தினிலே பாழ்நரகும் காட்டவல்ல மனக்குரங்கு கடவுளரின் பெருங்கொடையாம். மாயமனக் குகையினிலே மச்சுண்டு; மேல்மாடி வாழ்ந்திருப்போர் தேவர் கணம்; மற்றந்தக் கீழ் நிலையில் தாயறியா விலங்கினங்கள் தலையில்லாப் பெரும்பேய்கள்
111