பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அன்பு வழி

மக்களெலாம் தேவர்களாய்

 மாறவொரு வழியுண்டு

மனம் படைத்த பெரும்பயனும்

 மனிதனுக்கு வாய்த்திடுமாம்; தக்கபடி மனம் மலரத்
 தந்திரமும் நாமறிந்தால் தாரணியை விண்ணாடாய்ச்
 சமைத்திடலாம் நிச்சயமாய். மனம் என்னும் பெருங்குரங்கு
 மாயத்தின் பெருஞ்சூழ்ச்சி வாழ்வெல்லாம் தந்திடவும்
 தாழ்வெல்லாம் சூழ்ந்திடவும் கணத்தினிலே சொர்க்கமதும்
 கணத்தினிலே பாழ்நரகும் காட்டவல்ல மனக்குரங்கு
கடவுளரின் பெருங்கொடையாம். மாயமனக் குகையினிலே
 மச்சுண்டு; மேல்மாடி வாழ்ந்திருப்போர் தேவர் கணம்; 
 மற்றந்தக் கீழ் நிலையில் தாயறியா விலங்கினங்கள்
 தலையில்லாப் பெரும்பேய்கள்
             111