பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி

தாழ்வளிக்கும் உணர்ச்சியெலாம்

 தங்கியுரை பெருநரகம். அன்பரசு வீற்றிருக்க
 அருளாட்சி மேல் நிலையில்; அவ்வாட்சி ஓங்கிவிட்டால்
 அனைத்துலகும் இன்பமன்றோ? அன்புசெய்தால் தேவநிலை; .
 அதையழித்தால் 
               விலங்காவோம்;

ஆதிமுதல் தொடர்ந்துவரும்

 பூதகணத் திரையாவோம். ஆற்றல்மிகும் மானிடனே,
 அறிவாலும் மனத்தாலும் அற்புதமாம் கற்பனைகள்
 அவை செயலில் 
              வெற்றிகண்டாய்;

காற்றினிலே பறந்துவிட்டாய்;

கலைகள் பல தோற்றுவித்தாய்; கனவாய் நினைத்தவெலாம்
 கைகூடச் செய்துவிட்டாய்; அண்டம் அளந்துவிட்டாய்.
 அணுவைப் பிளந்துவிட்டாய். அளவில்லாச் சாதனைகள்
 ஆலுைம் உன்னகத்துள் மண்டுமிருட் கொடுங்குகையை
 மடை மாற்றி ஒளியேற்ற வகையறியாக் கீழ்நிலையில்
 வாய்த்த வெற்றி 
                யென்னபயன்?
            112