இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பு வழி
தாழ்வளிக்கும் உணர்ச்சியெலாம்
தங்கியுரை பெருநரகம். அன்பரசு வீற்றிருக்க அருளாட்சி மேல் நிலையில்; அவ்வாட்சி ஓங்கிவிட்டால் அனைத்துலகும் இன்பமன்றோ? அன்புசெய்தால் தேவநிலை; . அதையழித்தால் விலங்காவோம்;
ஆதிமுதல் தொடர்ந்துவரும்
பூதகணத் திரையாவோம். ஆற்றல்மிகும் மானிடனே, அறிவாலும் மனத்தாலும் அற்புதமாம் கற்பனைகள் அவை செயலில் வெற்றிகண்டாய்;
காற்றினிலே பறந்துவிட்டாய்;
கலைகள் பல தோற்றுவித்தாய்; கனவாய் நினைத்தவெலாம் கைகூடச் செய்துவிட்டாய்; அண்டம் அளந்துவிட்டாய். அணுவைப் பிளந்துவிட்டாய். அளவில்லாச் சாதனைகள் ஆலுைம் உன்னகத்துள் மண்டுமிருட் கொடுங்குகையை மடை மாற்றி ஒளியேற்ற வகையறியாக் கீழ்நிலையில் வாய்த்த வெற்றி யென்னபயன்?
112