பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புவழி

புத்தி மனவாற்றல் மிகும்

 மனிதனய் வந்ததுடன் 

நில்லாமற் பரிணாமம்

 நாம் வளர்க்க மாட்டேமோ? 

மனமிதற்கு வலியிலையோ?

 வளரத்தான் மாட்டாதோ? வாய்த்த மனம் குறுகியதோ?
 வானுயர விரிந்திடுமோர் வல்லமையும் இதற்கிலையோ?
 மற்றவுயிரன்றி மனிதனுக்குள் 
                    ளேதானும்

மக்கள் மனைஉற வென்றும்

 மாவட்டம் தேசமென்றும் கற்பனையில் எல்லைகட்டிக்
 காசினியைப் பிரித்த ழிக்கும் இச்சிறுமை தாண்டிடவும்
 இம்மனத்தால் ஆகாதோ? எல்லையுற்ற குட்டையிதோ?
 எழுந்து பொங்கி எங்கனுமே அன்புவெள்ள மாய்ப் பெருகும்
 ஆற்றலிலாச் சிறுமையிதோ? அனைத்துயிரும் உயிரில்லா
 அனைத்துமே ஒன்றென்னும் பரந்துணரும் அன்புடனே
 பரிணமிக்கும் வன்மையிந்த மனத்திற்கே இல்லையெனில்
 மனிதனிதைத் தன்னறிவால்
            114