இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்புவழி
மாற்றிடவும் ஆகாதோ?
மரணந்தான் இதன் முடிவோ? மானிடனே, இல்லை இல்லை, இக்கருத்தை நான் ஏற்கேன்; புத்தனென்றும் இயேசு வென்றும் புனிதமுனி காந்தி யென்றும் வாடுமிளம் பயிர்கண்டு வாடுமருள் வள்ளலென்றும் இத்தரையில் வந்தவர்கள் இம்மனமும் அன்பினிலே எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணும்வகைகாட்டுவித்தார்; வன்மையுண்டு மனத்திற்கும் மலர்ந்ததுவும் ஓங்கிவிடும்; எழுந்திரடா புறவெற்றி போதும்; இனி அகவெற்றி நாடிடுவாய்: மென்மை உணர்ச்சி யெலாம் மேலோங்கச் செய்திடுவாய்; விண்ணொளியால்குகையிருட்டை விழுங்கிடவே செய்திடுவாய்: அன்பினிலே மனம்மலர - அமரனைப் போல் வாழ்ந் திடுவாய்;
இன்பம் பெருகி யெங்கும்
எவ்வுயிரும் மகிழ்ந்திடவே அன்புவழி அன்புநிலை அன்புச் சிவமாவாய் அன்புவழி யோங்கிவிட்டால் அமரநிலை வந்திடுமே.
115