இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தியாகம்
அம்மொழி கேட்டவுடன்-முகம்
அன்றலர் தாமரையாய்ச்
செம்மொழி கூறுகின்றாள்-
அன்பின் தெய்வ மேயன்ன மங்கை.
'குடிதுயர் தான் களைதல்-உயர்
கொற்றவன் தன் கடனாம். -
கடிமணம் செய்தவர்க் காய்-வாழ்தல்
கன்னியர் தங் கடனாம்.
ஆதலின் என் பதியே-என்னை
அர்ப்பணம் செய்திடுவீர்.
காதற் கணவனுக்கும்-மக்கள்
கண்ணிர் துடைப்பதற்கும்
சாகக் கொடுத்து வைத்தேன்-இதிற்
சாலச் சிறந்த தில்லை;
தேக மெடுத்தபயன்-இன்று
தெய்வங் கொடுத்த தென்றாள்.
மன்னன் மனங் குழம்ப-மறுநாள்
மக்கள் உளந் துடிக்க
மின்னெனக் கேணியுளே-நங்கை
வேகமாய்ச் சென்றடைந்தாள்.
ஆழக் கிணற்றினுள்ளே-மறைந்த
அன்புருக் காணாமலே
தாழுங் குரலினிலே-மன்னன்
தயங்கியே கேட்டிடு வான் :
126