வீரன் குமரன்
அன்னையின் இன்மொழி கேட்டனன்-அவள்
அடிமலர் கண்களில் ஒற்றினன்;
"சொன்ன அறிவுரை போற்றுவேன்-உங்கள்
சூரத் தமிழ்மர போங்கவே."
வாங்கினன் கையிற் கொடியினை-நீல
வானில் ஜொலித்தது மூவர்ணம் :
பாங்கினில் அன்னையும் நெற்றியில்-வெற்றி
பாடித் திலகம் அணிந்தனள்.
"ஜய ஜய பாரதம்" என்றுமே-கூவித்
தலைநிமிர்ந் தேகினன் காளையும் ;
"ஜயஜய" என்றுபல் லாயிரம்-மக்கள்
சாற்றிப் பின்சென்றனர் வீதியில்.
பேரொலி அண்டம் பிளந்தது-அடிமைப்
பிடியும் மனத்தில் தளர்ந்தது;
வீரக் குமரனோர் சிங்கம்போல்-தடை
மீறிப் பவனியாய் வந்தனன்.
வெள்ளையர் விட்டெறி காசுக்காய்-மானம்
விற்றுப் பிழைத்திட்ட சேவகர்
கள்ளனைத் தேடிப் பிடியென்றால்-அவனைக்
காட்டிற் பிடிப்பம்என் றோதிடும்
சூரரத் தாசர் தலைவனாம்-ஒரு
சொத்தைப் பயல்வந்து தோன்றினான்
பாரதம் வாழ்கெனக் கூறினால்-அவன்
பார்த்துச் சகித்திடல் ஒண்ணுமோ
129