பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழவியம் ராணாவும்

குன்றுக் கூட்டச் சரிவினில் ஒண்டியாய்க்
குச்சு வீடொன்று தென்படக் கண்டதும்
சென்று வாயிற் கதவினைத் தட்டினன்
செரு விழந்தவத் தேயத்து மன்னனே.

நடை தளர்ந்தமூ தாட்டியும் மெல்லவே
நடை திறந்தனள் உற்றுற்று நோக்கினாள்; விடை பகர்ந்திலன் மன்னவன் உட்சென்றான், விரித்த ஓலைத் தடுக்கினில் சாய்ந்தனன்.

தோற்றம் கூறக் கிழவியும் பால் கனி
துரித மாகமுன் வைத்து வணங்கியே,
“ஆற்றல் மிக்கவிந் நாட்டின் அதிபரோ?
அடியன் காணவே வந்ததென்?" என்றனள்.

“நேற்று நாள்வரை உன்றன் அரசன்நான் நிலை குலைந்து படையுந் துறந்தின்று
காற்று வாக்கில் துரும்பென வந்துளேன்; கனியும் பாலும் எனக்கெதற்?” கென்றனன்.

“போர் புரிந்த களைப்பெலாம் ஆறியே
புதிய வெற்றிக்கு ஏகவே” என்றனள்;
“ஆரு மற்ற அனாதையாய் இங்கு நான்
அடைந் தனன்இனிப் போரில் மனமில்லை;

“நாட்டை நீங்கிப் பயணமாய்ச் சிந்துவாம் நதியைத் தாண்டித் தொலைவினில் போகவே ஓட்ட மாகவே வந்தனன்; சூறையில்
ஒண்ட நல்லிடம் தந்தனை வாழ்” கென்றான்.

133