பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 பிருதிவிராஜ்-சம்யுக்தை


பிருதிவிராஜ் சம்யுக்தையைக் காதலித்தான்.ஆனால் பகைமை கொண்டிருந்த ஜயசங்திரன் தன் மகளை அவனுக்குக் கொடுக்க மறுத்ததோடு அவளை வேரறோருவனுக்கு மணம் செய்ய நிச்சயித்துச் சுயம்வரத்திற்கு ஏற்பாடும் செய்துவிட்டான். சுயம்வர நாளன்று பிருதிவிராஜ் சம்யுக்தையைத் தூக்கிச் சென்ற துணிகரவரலாறு அனைவரும் அறிந்தது. அதுவே பாடலாக இங்கு உருவாகிறது.

மங்கை சுயம்வர நாளிது;
வந்தனர் மன்னர் பல்லாயிரம்
அங்கையில் மாலையை ஏந்தியே
அவையில்சம் யுக்தையும் போந்தனள்.

ஆரங் கரங்கொண்ட ஆரம்போல்
அசைந்து நடக்கிறாள் கூட்டத்தில்
ஆரங் கவள்முகம் நோக்கிடார்?
ஆர்முக மும்அவள் நோக்கிலள்.

பிருதிவி. ராஜனுக் கோலைதான்
போக்க மறுத்ததோ டாங்கவன்
உருவச் சிலையொன்று செய்துமே
ஒள்ளணி வாயிலைக் காத்திடும்

சேவகன் போலவே வைத்தனன்
தெளிவில் ஜ்யசந்த்ர ராஜனே;
பூவைதன் காதலற் கத்தனும்
புன்மை புரிந்ததைக் கண்டனள்.


137