பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி பெருமையெலாம் மறந்துநின்ற தமிழ்நாட்டு மக்களைத்தம் பெருமையறிந் தோங்கியெழக் கவிகள் சொன்னன் ஒருவனுக்கே உணவில்லை என்னிலந்தக் கருணையிலா உலகினையே அழித்திடுவோ மென்று சொன்னன் தரணியிலே அனைவருமே தாழ்வின்றி இன்பங்கூடிச் சரிநிகராய் வாழ்வமென்று முழக்கம் செய்தான் அரியநவ பாரதத்தை ஆக்கும்கவி பாரதியாம் அவன்புகழை யியம்பிடவும் வார்த்தை புண்டோ? 141