பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில்லாமலே கண்ணில் லாமலே கோலதே கண்ணுய் மண்ணினைத் தொட்டு மெல்லக்கால் வைத்து, "பண்ணிய பாவமோ? படைத்தவன் கோபமோ? என்னவோ தெரியேன் இக்கதியானேன்; நெஞ்சினில் இரக்கம் நிறைந்தவர் இல்லையோ? கெஞ்சினேன் அருள்வீர்; அஞ்சலி என்ருள்மறைந்தும் கந்தையில் மறைந்திடா வாட்டம்: அறந்தன் வலியினல் அகற்ருெளுப் பசிநோய்; அன்னையென் றேத்தும் ஆதியாம் சக்தி தன்னையே காட்டும் பெண்மையின் வடிவம்; கையிலோர் குழந்தை கசடனும் எவனே மையலே காட்டி மயக்கியே பசப்பிப் பேயாம் காமப் பெருந்தீச் சுட்டதால் நாய்போல் உடலை நச்சினன் தந்ததுபாவச் சின்னமாய்ப் பாவையின் இடுப்பில் கூவி இரைத்துக் குவலயம் பழித்திட நின்றதாம் எனினும் நெஞ்சினில் எங்கோ கன்றிய பசியின் கருக்கலுக் குள்ளே மின்னிடும் தாய்மையின் வேகத்தால் தாங்கினுள்; தன்னையும் நோவாள்; ‘சாமியின் கண்ணும் நொள்ளையோ?” என்பாள்; நொடியினில் ஆயிரம் சள்ளைக் கிளர்ச்சியால் சாம்பலாய் உதிர்வாள்; 14?