பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிர்ந்த சருகு கண்ணெடுத்தும் பாராமல் காலில் மிதித்தார்கள்; மண்ணிலே வீழ்ந்தவுடன் மதிப்பெல்லாம் போனதுவோ? பசையிருந்த போதெல்லாம் பத்துப்பேர் - சுகங்காணத் திசைவிரிந்த மரக்கிளையைச் சீருடனே அணிசெய்தாய்: காற்றுன்றன் செவிவழியே கனிந்தன்று பாடிவரும்: வேற்றுப் பறவையெலாம் விதவிதமாய்ப் பேசிவரும்; வாடிநைந்தே உடல்சுருங்கி வறண்டுவிட்டாய் என்றவுடன் ஓடிவந்து காற்றதுவும் ஒருகணமும் எண்ணுமல் குப்புறவே பிடித்துந்திக் கூசாமல் சீறியிங்குக் குப்பையிலே சாக்கடையில் கொண்டுதள்ளி - *-- விட்டதுவே ! காற்றுத்தே வாஇதுவும்? கடுவஞ்சப் பயல் அலவோ? சீற்றமதன் மேலெதற்கு? தினமும் இந்தப் பாரினிலே பண்புச் சிகரத்துப் பாரிக்கும் மாந்தரிடம் கண்ட திதுதானே? கைவறண்டால் மதிப்பவர் யார்?