பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் நேற்ருய் இன்றும் நேற்ருய் நாளையும் இன்ருய் என்றும் ஒன்ரும் இதுவோ வாழ்க்கை ? குறிஇல்ாப் பொறியெனச் செய்ததே செய்து மறையுமென் நாளெலாம்; மாருச் சிறையினேன். உறுபய னின்றி உடற்கென உழைத்துப் பிறர்கைக் கூத்தளுய்க் குறிக்கோ ளின்றி உழைத்துத் தேய்ந்தே உருக்குலை கருவிபோல் புழையுடை வாழ்க்கையில் புழுதிபோ லலைந்து அடிப்பணி புரிந்தே அலையிடைத் துரும்பாய் அலைவதே யல்லால் ஆனபய னுண்டோ ? குறியுடை வாழ்வினைக் குறித்தே ஏங்கினேன்:மறைந்தழி திறனெலாம் வானுயர்ந் தோங்கியே செயற்கரி தானதைச் செய்திடும் உயர்பெரு வாய்ப்பும் உறுமோ எனக்கே..? இன்றும் கேற்ருய் நாளேயும் இன்ருப்-கேற்றைய நடை முறைப்படியே இன்றும் வாழ்க்கை கடக்கிறது. இன்றைய கடைமுறைதான் காளைக்கும் ; மாறுதலே இல்லை. பொறி-எங்திரம். பிறர் கைக் கூத்தளுய்-பிறர் தம் விருப்பப்படி ஆட்டு விக்கும் கடிகன் போல. புழையுடை வாழ்க்கை-உள்ளே துளைபட்டுப்போன வாழ்க்கை. 186