பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கை வளம்

1

வானமெங்கும் பொங்கு சுடர்
வையமெலாம் இன்ப வெள்ளம்
எங்குமே ஆட்டம்
- இன்னிசையாம் பாட்டம்
களிப்பொலியே கேட்டேன்
கையில் ரண்டு காசிருந்ததே

2


வானமெங்கும் காரிருளே
வையமெலாம் துக்கமயம்
எங்குமே வாட்டம்
இடர்ப்பகையாம் கூட்டம்
அழுங் குரலே கேட்டேன்
அந்தோ கை வெறுங்கையே.

188