பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கு கெறி மரகதத்துச் சின்னவுடல் மணியரக்கு நீள்மூக்கு சிறுவெள்ளை யடிவயிற்றில் செவ்வானங் காட்டியது ஒடையிலே நீண்டகிளே ஒற்றைக்கொம் பமர்ந்ததுவே, ஆடிக் குடிப்பதுவும் அம்புதனைப் போல்பாய்ந்து நீர்க்குள் சிறுமீனே நெடுமூக்கில் குத்தியதைப் பார்க்கும் கணத்திற்குள் பசியாற்றிக் கொள்ளுவதும் வண்ணக் குருவிசெயல் மனத்தில் சுழன்றிடவே எண்ணம் அதிற்சேர்த்தே இருந்தேன் சிலநேரம். அப்பொழுதங் கேநடந்த அதிசயமும் என்ன சொல்வேன் : தப்பாமற் சிறுமீனைத் தான்பிடிக்கும் குருவிதனை வல்லுாறுப் பறவையொன்று மறைந்திருந்து கண்வைத்து பொல்லா நொடிப்பொழுதில் போனதே > * பற்றியந்தோ ! என்னடா சட்டமிது, இதுவோ இயற்கைநெறி? சின்னப் புழுபூச்சி சிறுமீன் இரையாகும்; சிறுமீனத் தான்கொத்தச் செம்மூக்கு - மணிப்பறவை : பறவையதைக் கொல்லவொரு பாழ்வயிற்று - வல்லூறுகொல்லுவதே இந்தக் குவலயத்தின் பெருவிதியோ ? வல்லார் எளியாரை வாட்டிப் பிழைப்பதுதான் எழுதா விதியாமோ? எரிக்கண் புலியிங்கே உழுதா உயிர்வாழும் ? ஊணுக்குக் கொல்லாமல் 206