பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுங்குழங்தை

(ஆருடைய குழந்தையிது
அழுதுகொண்டு நிற்கிறதே!)

கன்னத்தில் முத்துதிரக்
கவலையிருள் தான்படர
என்னத்துக் காகஇந்த
இளங்குருத்து வாடினதோ ?
சின்னஞ் சிறுமொட்டு
சிரித்துமகிழ்ந் தாடாமல்
கொன்னி இதழ்பிதுக்கிக்
குலைகின்ற காரணம்என்?


(ஆருடைய குழந்தையிது
அழுதுகொண்டு நிற்கிறதே!)


பூவுலகைப் பார்க்கவந்த
பொன்னாட்டுத் தூதெனவே
மேவுமிளங் குழந்தையழ
விடலாமோ? விண்ணோர்கள்
தாமிதனைச் சகிப்பாரோ ?
தடத்தருகே மைந்தனழத்
தேவியரன் தன்னோடும்
தேடிவந்த தறியீரோ ?

(ஆருடைய குழந்தையிது
அழுதுகொண்டு நிற்கிறதே!)

24