பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியோசை கோயிலிலே மணியோசைக் கோமாளம் ஆடிவிட்டு வாயிலெலாம் வன்கருமை மனமெல்லாம் பேயிருட்டாய் வாழ்வினிலே மடமைவழி செல்லுகின்ற மாண்புடையீர் கீழ்மையிலே நிலைநின்றும் கேலியறக் கூத்தெதற்கோ ? மணியோசை வேண்டாவாம் மனக்கோயில் அன்பெனுமோர் இணையேது மில்லாநல் லெழில்நந்தா விளக்கிட்டால் பொன்னுட்டு மணியோசை பொங்கியெழுந் தெண்டிசையும் என்னுட்டும் கணகனத்தே இன்னமுதம் பொழிந்திடுமே. கோமாளம் - கோமாளியின் பரிகாசச் செயல். வாயில் என்பது இங்கு ஐம்பொறிகள். வன் கருமை - வலிய கருஞ் செயல்களாகிய கொடுமைகள். கணகணத்து - கணகன வென்று ஒலி செய்து. 224