பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் குஞ்சு

(ஆண் குயில் இனிமையாகப் பாடுகிறது. பெண்குயில் அதைக் கேட்டு இன்பத்தில் மூழ்கியிருக் கிறது. பாடுவதற்கும், அதைக் கேட்டு மகிழ்வதற்கும் அவை கற்றுக்கொண்டிருக்கின்றனவே ஒழியக் கூடு கட்ட அவை கற்றுக்கொள்ளவில்லை. முட்டையிடு கின்ற பருவத்திலே பெண் குயில் தந்திரமாகக் காக் கையின் கூட்டிலே முட்டையைச் சேர்த்துவிடும். ஆண் குயிலும் அதற்குத் துணை புரிவதுண்டு.

காக்கை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். அன்புடனே குஞ்சுகளைப் பேணி வளர்க்கும். ஆனல் அந்தக் குஞ்சுகள் தன்னுடையனவல்ல வென்று கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டாலும் தாயாகவிருந்த அந்த மூடக் காக்கை பேயாக மாறி அவற்றைக் கொத்திக் கொன்றுவிடும். அவ்வாறு கொத்துண்டு குருதிதோய வேப்பமரத்தடியில் இறந்து கிடந்தகுயிற் குஞ்சொன்றைப் பார்த்தபோது இந்தப் பாடல் உருவாயிற்று.)


கரும்பட்டுப் போன்றவுடல்
கைவளராப் பூங்குஞ்சு
விரும்பிக் கவிமகிழும்
விண்பாட்டின் மெல்லரும்பு

வாடிக் களையிழந்து
வாய்திறந்து மாண்டிடவே
மூடச் சிறுகாக்கை
மூர்க்கமுடன் கொத்திற்றோ?

26