பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மலர்

எட்டிப் பறித்தாய் எழில்நாசி மனம் நுகர்ந்தாய்
அட்டக் கருங்கூந்தல் அணிசெய்ய வைத்துப்பின்
வீசி எறிந்தாய் மிகவாடிச் சருகாகித்
தேசு குறைந்தேன் தெருப்புழுதி மிதிபட்டேன்
என்றாலும்
மெல்விரலில் நீ தொட்ட விஞ்சையினை எண்ணியெண்ணி
உள்வளரும் உவகையிலே உயிர்தழைக்கும் திருவுடையேன்.