இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஓங்குக சுடர் <Poem>உள்ளத்தில் என்னவோ ஒளிந்து நிற்குது ஓசைப் படாமலே-அது
கள்ளத்தில் மேலெழும் காட்டுக் குரங்கினைக் கட்டுக்குள் வைப்பதாம்
ஐம்புல வேடர்கள் ஆட்டக் களிப்பிலும் அயர்வுப் போதினிலும்-சிறு
சம்புக வழிதேடித் தாவிக் குதித்தெழும் தாழிருட் பேய்களையே
மண்டையிற் குட்டியே மாயக் குகை தள்ளி வல்லிரும் பாணியிட்டு-ஒரு
கண்டமும் வாராமல் காக்கும் சுடரது காலத்தும் ஓங்குகவே !<\poem>
260