பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிப்பு காதலுன்மேற் காதல் கனல்சுரக்கும் தேனுாற்று சீதமதித் தண்ணிலவைச் செந்தீயாய்க் காய்ச்சியென்றன் . உடலொன்ருே உள்ளத்தும் உயிரூடும் பாய்ச்சிடுமே கொடிமின்னற் கொழுந் தனைய கொள்ளையெழில் வளர்திருவே உன்னைமனக் கோயில்வைத்து ஊழித்தி மதிலெடுத்தேன் அன்பொழுக நீ நோக்கின் அக்கணமே அம்மதிலும் அமுதமிட்ட பொற்கலசம் ஆகாதோ விஞ்சைபுரி குமுதமுன்வாய்ச் சிரிப்பினுக்குக் கூடாத சித்தியுண்டோ அன்னமே ஒருமாற்றம் அறிவிக்க நான் விழைந்தேன் கன்னலென என்னிடத்தே கருணையன்பு காட்டாமல் 264