பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணுடும் பொன்குடாம் சுரந்திடுதல் கண்டுள்ளேன் சோர்ந்தவுயிர் தனக்காகப் பெருங்கனிவும் அந்நிலையில் பிறந்திடுமென் இயல்பறிவேன் ; ஏந்தியகை கண்டுளை வேன் : இறைவனடி மிகநினைவேன் ; ஆய்ந்துனைப்போல் உளம்விரிவேன் அப்பரிசே எந்நாளும் இன்பத்தும் துன்பத்தும் எங்களுக்கே வாய்த்திருந்தால் மன்பதையும் வாழ்ந்திடுமே மண்ணுடும் பொன்னடாம். புங்க மரம் கரும்பச்சைத் தழை போர்த்து கிற்கிறது. அதற்குள்ளே புகுந்திருந்து ஒரு குயில் கூவுகிறது. அதன் குரலிலே என்றுமிலலாத புதிய உணர்ச்சியும் கற்பனைக் கனிவும் கெளிகின்றன. அதைச் செவிமடுத்தபோது உண்டான சிங்தன களின் விளைவாக எழுந்தது இப் பாடல். இன்பத்தில் திளேக்கும் போது மற்றவர்களின் துன்பத்திற்காகப் பரிவு ஏற்படுவதில்லை. ஆளுல் எனக்கு ஏதாவது துன்பம் நேர்ந்துவிட்டபோது பரிவும், இரக்கமும், பக்தியும் மேலெழுகின்றன. இந்த உயர் உணர்ச் சிகள் எப்பொழுதும் மேலோங்கி இருக்கலாகாதா? அவ்வாறு என்றும் ஓங்கியிருங்தால் மண்ணுடு பொன்குடு ஆகிவிடும். பண்ணிலவில்-பண்ணுகிய நிலவு. ஏந்திய கை-பிச்சைக் காக ஏக்திய கை, 267