பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இளங்தாய் தாழ்வாரத்தில் குழந்தையை மடிமேல் வைத்துக் கொண்டு தாய் இனிமையாகக் கூவுகிருள்; வருக நிலாவே, வந்தென் கண்மணிக்கு உச்சியில் ஒரு முத்தங்கொடு’ நிலாவை ஒருமுறை பார்க்கிருள்: பிறகு தன் கையி லிருக்கும் இனிய அழகுத்திரளைப் பார்க்கிருள்; நிலா அவள் அழைப்புக்குச் செவிகொடாது அமைதி யாக முறுவலித்துக் கொண்டிருக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தை தாய் சொல்வதைத் தானும்சொல்லிச் சிரிக் கிறது: நிலா நிலா வாவா!' - தாய் நகைக்கிருள்; நிலவு ஒளிரும் இரவும் நகைக் கிறது. கவிஞளுகிய நான் அக் குழந்தையின் தந்தை; அத் தாயின் கணவன்; மறைவிலிருந்து இந்த ஓவியக் காட்சியைச் சுவைத்துக் கொண்டிருக்கிறேன். (துவிஜேந்திரலால் ராய் எழுதிய பாடலின் பெயர்ப்பு)