பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழிய உலகம்

வாழிய உலகம் வாழிய அன்பறம்
வாழிய உயர்நல மாண்புகள் எல்லாம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
புன்மையும் சிறுமையும் பொன்றியே மறைக
இன்பமும் எழிலும் கலையுடன் ஓங்குக
எம்மனுேர் ஆகவே அனைவரும் வாழ்க
பஞ்சமும் பசியும் துஞ்சியே தொலைக
பார்மிசை என்றும் அமைதியே நிலவுக
உண்மையும் கருணையும் உளந்தனில் நிறைக
உன்னதக் கொள்கைசேர் வாழ்வதே மலரக
மாநிலம் பேரின்ப வீடதாய்ப் பொலிக
மக்கள் எல்லோரும் இறையருள் பெறுக.


312