பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணீர்

 மோதிமிதித் தழித்திடுவேன்
முத்துதிரத் தான்சகியேன்
என்றுபல வீறுரைக்க
இளைஞர்களைத் துண்டிடுவாய்
உன்றன் பெருமையெலாம்
ஓதிடவே சொல்லுண்டோ ?
வீரன் விழிகளிலே
வெட்கமிலாக் கோழைமை நீ
உறுதியெலாங் குலைத்திடுமோர்
ஒப்பிலாப் பெண்படை நீ
உள்ளத் துயரமெலாம்
ஒரு சேர்த்துத் தான் கரைத்து
மெள்ள வெளியேற்றும்
வித்தையறி பனிச்சொட்டே !
துன்பத்தின் கேணியிலும்
சுரந்திடுவாய் : அன்றிமிகும்
இன்பத்தின் உச்சியிலும்
எங்கிருந்தோ தோன்றிடுவாய்;
மாயவித்தைக் கண்மணியே !
வற்றியறி யாஊற்றே
பாயுமருட் கருணையெனும்
பயிர்வளர்ப்பாய் வாழிய நீ !

           34