பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கருக்கரிவாள்

கருக் கரிவாள் கைக் கொண்டே
          கழனி செலும் இள நங்காய் !
அறுத்து விட்டாய் என் உளத்தை
      அஞ்சனக் கண் வாளாலே :
  
கபடமில்லா நேர் நோக்கால்
      கனல் பாய்ச்சும் பெண் மானே,
உபமானம் ஒன்றில்லா
      உயர்வதனப் பைங்கிளியே.
  
பூச் சூடியகொண்டை
      புலன் ஐந்துந் தான் மயக்கப்
பாச்சான் கொடி இலைபோல்
      பசுமை கொண்ட சிற்றாடைக்
  
கற்றைக் கொசுவமது
      கலைந்தே சரிந்தாட,
ஒற்றை வடச் செம்பவளம்
      உவந்தேறி ஆடிவரும்
  
அங்கி தனைக் கண்டறியா
      அங்கலசம் சிறிதசையப்
பொங்கி வரும் இயல் அழகுப்
      புன்னகையாய் போகின்றாய்.

           38