இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கருக்கரிவாள்
எட்டிக் களை பறிக்கும்
இடமெல்லாம் நிற்கேனோ ?
கட்டி மண்ணே நீ உடைக்கக்
கைத்தடியாய் ஆகேனோ ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
இன்னிழலாய்த் தழுவேனோ ?
மீறுகின்ற காதலுடன்
மெல்ல மொழி பேசாயோ ?
கருக்கரிவாள்-ரம்பம் போன்ற வாயை உடைய அரிவாள்; நெல் முதலிய பயிர்களை அறுக்க உதவுவது. பாச்சான் கொடி-ஒருவகைச் சிறுமரம் - பசுமையான கொடி போன்று அதன் இலை இருக்கும். 39