இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதுவா வெகுதூரம்
கானுறையும் முனியேநீ
கானவிழை நாடெதுவோ?”
"அதுவா வெகுதூரம்
நிதந்தேடி யலைகின்றேன்.”
"அந்தமிலா தண்டங்கள்
ஆக்கியழித் தமையாதாய் எந்தநல்ல திருவுலகை எண்ணகத்தே கொண்டுள்ளாய் முந்துமறைத் தனிமுதலே மொழிந்தருள்க நானறிய” "அதுவா இதுகாறும் ஆகவில்லை என் படைப்பில்."
45