இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறைந்த ஜோதி
யாருக்கும் அன்புடமை
யாருக்கும் நல்லுறவு-
மார்பினிலே குண்டேறி
மாய்ந்திடவோ மாய்ந்திடவோ!
காந்தி மறைந்ததுவோ
காசினியின் கண் போச்சோ?
ஏங்கித் தவித்திருந்த -
இந்தியரைக் கரை சேர்த்த
ஓங்குபுகழ் மாலுமிதான்
ஒய்வெடுக்கச் சென்றானே?
பாங்கிழந்த பாரதத்தே
பணியெல்லாம் தீர்ந்ததுவோ?
அன்பென்று பேசியங்கே
அன்றொருவர் வந்திருந்தார்-
நெஞ்சினிலே ஆணியிட்டு
நீசர் வதைத்திட்டார்.
அன்பென்று சொல்லியிங்கே
அண்ணலிவன் இன்றுவந்தான்-
நெஞ்சத்தில் ஈயமிட்டு
நிலைகெட்டோன்கொன்றிட்டான்.
புத்தனைப் போல் அன்புருவாய்
வாழ்ந்திருந்த புண்ணியனைச் சித்தனைப்போல் பற்றற்றுச் சேவை செய்த காந்தியினை
47