பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைச்சொல்

எண்ணப் பெருங்குகையில்

 இருள்படிந்த மூலையிலே

எழுந்தாடும் உருவறியா

 ஒவியங்கள் எத்தனையோ !

வண்ணக் கருத்தும் உயர்

 வாய்மைநிறை லட்சியமும்

வடிவில்லா தேங்கினவே

 வாய்த்தசொலைக் காணுமல்

மண்ணிற் குரம்ஊட்டும்

 விண்ணமுதச் சொல்பெற்றால் 

மனச்சுடரை வடித்தெடுத்து

 வைத்திடுவேன் கவிதையிலே

கண்ணிற் படா திருந்த

 கலைமணியாம் அஜந்தாவின்

எண்ணரிய சித்திரம்போல்

 எங்கும் ஒளி வீசிடுமே.