இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதைச்சொல்
எண்ணப் பெருங்குகையில்
இருள்படிந்த மூலையிலே
எழுந்தாடும் உருவறியா
ஒவியங்கள் எத்தனையோ !
வண்ணக் கருத்தும் உயர்
வாய்மைநிறை லட்சியமும்
வடிவில்லா தேங்கினவே
வாய்த்தசொலைக் காணுமல்
மண்ணிற் குரம்ஊட்டும்
விண்ணமுதச் சொல்பெற்றால்
மனச்சுடரை வடித்தெடுத்து
வைத்திடுவேன் கவிதையிலே
கண்ணிற் படா திருந்த
கலைமணியாம் அஜந்தாவின்
எண்ணரிய சித்திரம்போல்
எங்கும் ஒளி வீசிடுமே.