பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

கருணை வாரிதியே கறைமிடற் றண்ணலே
திருவருட் கென்றன் சிறுவிண் ணப்பம் :
இப்பிறப் பதனிலோ எப்பிறப் பதனிலோ
தப்பிநா னிழைத்த தவறுகள் எல்லாம்
இன்றெனச் சூழ்ந்துபேரி டருற நகைத்து
நின்றன ; அதனல் நெஞ்சம் முறிந்தேன்.
மணமுடிந் தின்றுதான் மாதம்ஏ ழாயின,
கணவருக் கென்மேல் கடுகத் தனையும்
அன்பிலை ; ஆனல் அவர்மே லிழுக்கிலை.
தந்தைதாய் செய்த தொந்தரவதனால்...
பெற்றவர் மகிழவே பெண்எனைக் கொண்டனர்.
மற்றிதை யறிந்தும், மனம் அவர் கனிந்து
காலக் கழிவினில் காதலென் மேற்கொள்ச்
சாலவும் முயன்றேன் ; தளர்விலா தவர்க்கு
உகந்தன எல்லாம் ஓதுமுன் செய்தேன் ;
அகமலர்ந் தவரும் அடிமையை நோக்கிட -
அருளுவா யென்றுனை அனுதினந் தொழுதேன்;
பெருகுமென் வினையால் பேதமே விளைந்தது.
ஒருகணம் எனையவர் உற்றுநோக் கிடினும்
மறுகணம் உயிர்த்து வெறுவெளி நோக்குவார் ;
உளத்தினில் அழுந்தியே உருகிநின் றிடுவார்-
சுளித்தெனைப் பார்த்துச் சுடுகொல் கூறினும்,
கெஞ்சிய வார்த்தையால் நெஞ்சிற் படர்ந்த
விஞ்சிய வருத்தம் விலக்கிட முயலலாம் ;
மனப்பண் புடையாமல் வாய்விட் டுரையார்;
புணப்புழுப் புகுந்த போதினைப் போலவே

                      61