இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சத்தியம் சத்தியம் செத்ததோ
தர்மம் ஒளி மங்கிற்றோ
உத்தம னெம் காந்தி மகான்
நெஞ்சத்தின் உதிரமது
இத்தரையில் பட்டவுடன்
என்றும் நிலைத்திருக்கும் சத்தியம் செத்ததோ தர்மம் ஒளி மங்கிற்றோ?
சத்தியத்தின் சோதனையில்
தர்மநெறி அன்பஹிம்சை
பக்தியுடன் காத்துநின்ற
உத்தமனெம் காந்தி மகான்
நெஞ்சத்தே குண்டேறி
நினைவிழந்த அக்கணத்தே
சத்தியம் செத்ததோ
தர்மம் ஒளி மங்கிற்றோ?
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமிட்டு பாரதத்தாய்
கைத்தனையைக் களைந்தெறிந்த
அத்தவைன் திருமார்பில்
அறிவிழந்தான் சுட்டவுடன்
ஆராமா எனும்போதே 68
68.