இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்க காந்தி
குறிப்பு: காந்திமகானின் பொன்னுடம்பு மறையுமுன்புநடந்த
காந்தி ஜயந்தி விழாவொன்றில் பாடியது.
அன்புடன் அறமும் ஆட்சி
அவனியில் புரியுமாகில்
மன்பதை இன்ப மெய்தும்
வானவர் வாழ்க்கை கூடும் என்பதோர் உண்மை தன்னை இயம்பிய புத்தன் ஏசு
வன்பெரு மரபில் வந்த
மகாத்மனம் காந்தி வாழ்க!
சத்தியம் என்றும் ஓங்கும்
தர்மமே முடிவில் வெல்லும் கத்தியும் வாளுந்தள்ளிக் கருத்தினில் அஹிம்சைபூண்டு அத்தனைப் பணிந்து வாழ்வீர் அல்லலிங் கில்லை என்று தத்தளித் தமரில் நைந்த தாரணிக் குய்வு சொன்னாய்
சக்கரம் அன்னட் கையில்
சமர்செயக் கீதம் பாடும்
சக்கரம் இன்றுன் கையில்
சாந்தியின் கீதம் பாடும்
69