பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாய் நீ

                 காட்சி

மலர்ந்தது முழுநிலா
எங்கே?
நீலக் கடலருகே நீண்டதொரு நிலாமுற்றம்
அங்கே.
சுருளும் அலைசெய்யும் அரவக் குழைவினிலே
இருவர் உயிர்கலந்த எல்லையிலாக் காதலிலே
இனித்துாறும் அன்புச்சொல் இன்னமுது பருகையிலே
முருகன் மறைந்து நின்று முடித்துவிட்ட நட்பினிலே
விரிந்ததந்த வானப்பூ.
நெஞ்சமொன்றாய் உயிர் ஒன்றாய்
நிலாமுற்றம் வீற்றிருந்து
தேன்பேச்சும் பேச்சில்லா மோனத் தெளிவுரையும்
கேட்டுவந்த முழுநிலவு மீட்டுமிங்கு பன்முறையும்
வந்துவந்து மறைந்திடவும் வாடிநின்றேன்--
இன்றுமிங்கு சிரித்தந்த:வெண்ணிலவு
வந்து தழைத்ததுவே-அது என் வார்த்தைக் கிரங்காதோ?

               வேண்டல்
               

வானத்துப் பொன் விளக்கே
(அன்று நீ என்)
வார்த்தையெலாங் கேட்டாயே
நெஞ்சிற் கிளுகிளுத்த நினைவெல்லாம் உணர்ந்தாயே

                        74