இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்னை கையின்
மிடிமை கொன்று கொடுமை நீக்கி
வேந்தர் போல வாழுவோம்;
விந்தை யென்றே உலகம் போற்ற
மேன்மை யாவும் காணுவோம்;
4.
மனிதர் யார்க்கும் பொதுநல் நீதி
வாழ்க்கை இன்பம் பொதுவிலே;
மனிதர் யார்க்கும் பொதுநல் உடமை
வழங்கி யன்பு கூட்டுவோம்;
கணித ஞானம் கலைகள் ஞானம்
கவிதை ஞானம் ஓங்கவே
கடவுள் என்னும் உலகின் சக்தி
காணும் ஞானம் ஓங்கவே
5
செயல் பெருக்கி மயல் கருக்கித்
தீமை போக்கி வாழுவோம்;
சிந்தை விரிவில் தோன்றுங் கனவைச்
செய்து காட்டி மகிழுவோம்;
புயல் வெடித்த காடு போலப்
புன்மை வீழச் சாடுவோம்;
புனிதபார தத்தை யென்றும்
போற்றி ஒன்றாய்க் கூடுவோம்.
77