பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஜேய் ஹிந்த்

         பல்லவி 

ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த் ஜெய ஜெய ஜேய் ஹிந்த்!

         சரணம்

அடியடா முரசம் ஆர்த்தெழுந் தாடடா அன்னை கை விலங்குகள் அகன்றன காணாய் -ஜேய்ஹிந்த்

இன்னுயிர் தந்தவள் ஏக்கமுந் தீர்ந்தே புன்னகை புரிந்தாள் பொன்முடி சூடினள்-ஜேய்ஹிந்த்

சிறுமைகள் மாய்ந்தன சீரெலாம் பெருகிடும் வறுமையில் வாடிய மக்களும் ஒங்குவார் -ஜேய்ஹிந்த்

இன்பமும் அன்பும் எங்குமே பொங்கிட அன்னை யெம் பாரதி அறம் வளர்த்த திடுவாள்-ஜேய்ஹிந்த்


             78